ஒரு விளம்பரம்


பொதுச்சேவைகள் பிடிக்கும் என்று ஒரு பெருமைக்காக பொய் சொல்லிக்கொண்டாலும் மரம் நடுவது மட்டும் ஏனோ எனக்கு மிகவும் அவசியமானது என்று தோன்றிக்கொண்டேயிருப்பது மட்டுமில்லாமல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருப்பது உண்மை. ஆகவே இந்த 'சென்னை சமூக சேவை நிறுவனத்'தின் இந்த சேவை குறித்து கேள்விப்பட்டவுடன் அதன் நம்பகத்தன்மையைக்கூட சந்தேகிக்காமல் அதை விளம்பரப்படுத்த முயன்றிருக்கிறேன். இயன்றவர்கள், விருப்பமிருப்பவர்கள் தவறாது சேவையை பயன்படுத்துங்கள். நாம் நீடித்திருக்க ஒரு இலையை தளிர்க்கச்செய்யுங்கள்.!

.

20 comments:

பொதுச்சேவைகள் பிடிக்கும் என்று ஒரு பெருமைக்காக பொய் சொல்லிக்கொண்டாலும் மரம் நடுவது மட்டும் ஏனோ எனக்கு மிகவும் அவசியமானது என்று தோன்றிக்கொண்டேயிருப்பது மட்டுமில்லாமல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருப்பது உண்மை. ஆகவே இந்த 'சென்னை சமூக சேவை நிறுவனத்'தின் இந்த சேவை குறித்து கேள்விப்பட்டவுடன் அதன் நம்பகத்தன்மையைக்கூட சந்தேகிக்காமல் அதை விளம்பரப்படுத்த முயன்றிருக்கிறேன். இயன்றவர்கள், விருப்பமிருப்பவர்கள் தவறாது சேவையை பயன்படுத்துங்கள். நாம் நீடித்திருக்க ஒரு இலையை தளிர்க்கச்செய்யுங்கள்.!

 

சமூக அக்கறையுடன் இதை பதிவாகவே வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் அண்ணே.

 

பாராட்டுக்கள் அண்ணே.

 

//சமூக அக்கறையுடன் இதை பதிவாகவே வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் அண்ணே.//

-ரிப்பீட்டு..

 

அண்ணே ஆதி அண்ணே.. ப்ராமாதம் போங்க...

உடனே போட்டுட்டீங்க

வாழ்த்துகள்

 

இப்போ மரம் நடமால் போனோம் என்றால் நமது சந்ததியருக்கு (ஏன் நமக்கேகூட) நாளை மூச்சு விடுவதற்கு கூட ஆக்ஸிஜன் இருக்காது. மரம் நடுவதை நமது கடமை என்றே கருதுகின்றேன்!
இதை ஒரு பதிவாக போட்டதற்கு நன்றி. பாராட்டுகள் ஆதி.

 

எல்லாம் சரிதான்.. ஆனா... விடுங்க.. அப்புரம் நம்மள சுப்ரமணிய சாமின்னு சொல்லிடுவாங்க

 

நல்ல காரியம் செய்தீர்கள் ஆதி!

ஆமா எதுக்கு பதிவை பின்னூட்டத்துல ரிப்பீட்டினீங்க?

 

சமூக அக்கறையுடன் இதை பதிவாகவே வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்

:)))

 

///இப்போ மரம் நடமால் போனோம் என்றால் நமது சந்ததியருக்கு (ஏன் நமக்கேகூட) நாளை மூச்சு விடுவதற்கு கூட ஆக்ஸிஜன் இருக்காது. மரம் நடுவதை நமது கடமை என்றே கருதுகின்றேன்!
இதை ஒரு பதிவாக போட்டதற்கு நன்றி.////


ரிப்பீட்டு

 

நன்று அண்ணா.. :))

 

/ஆமா எதுக்கு பதிவை பின்னூட்டத்துல ரிப்பீட்டினீங்க?/

அதானே?? :)))

 

பகிர்வுக்கு நன்றி

இந்த விஷயம் எனக்கும் ஈமெயிலாக வந்து, நானும் எஸ்.எம்.எஸ் செய்து, போதாக்குறைக்கு போன் வேறு செய்து
மரக்கன்று வேண்டும் என சொல்லி ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகிவிட்டது.
இன்னும் வந்தபாடில்லை.

 

மிகவும் அவசியமான பதிவு ஆது. பாராட்டுக்கள்.

 

அனைவருக்கும் நன்றி.!

பரிசல், ஸ்ரீமதி : முதலில் படத்தை மட்டும் போட்டுவிடலாம் என்று எண்ணினேன். பின் கருத்தை தெரிவிக்க பின்னூட்டமிட்டேன். அதன் பின் அதே கருத்து பதிவிலும் இருந்தால் பெட்டர் என்று தோன்றியது..

அமித்துஅம்மா : இலவச சேவையில் குறைபாடுகள் இருப்பது சகஜமானதே. மீண்டும் முயற்சியுங்கள். காத்திருங்கள். கிடைத்தால் கண்டிப்பாக பதிவுசெய்ய மறவாதீர்கள்.!

 

இயற்கை இயற்கையாக இருந்தால் எந்த இடர்பாடும் இல்லை.மரம் வளர்த்து வரும் சந்ததியை காப்போம்..
சோ.ஞானசேகர்..

 

ம்ம்ம்...பிடிங்க ஒரு பூமரம்!!!!...எவ்வ்ளோ நல்ல விஷயம்???இன்றுதான் எங்கள் பள்ளியில் Plantation Day கொணடாடினோம்.....மொத்தம் 402 செடிகள் நட்டோம்.....

 

இங்கே ஜெய்ப்பூரில் இதுமாதிரி இருககா சொல்லுங்க??????

 

படத்தை கிளிக்கி பெரிதாக்க முடியவில்லை.என் கணினியில் ஏதோ கோளாறு.

Yet செய்தியை புரிந்து கொண்டேன்.ஓக்கே !!!