
மேலும் சில முறிதல்கள் நிகழ்கின்றன
இதைச் சொன்னமைக்காக
இவன் வருந்தி உழல வேண்டும்
காயம் கொள்ள வேண்டும்
வார்த்தைகள் இல்லாமல் கழியும் பகல்கள்
அத்தியாவசியமாய் எழும்
தட்டையான ஒலிக்குறிப்புகள்
பிரியும் படுக்கைகள்
காற்றோடு மட்டுமே உறவு
இன்னும் இன்னுமென வளரும்
அத்தனையையுமே
அடித்துச்செல்ல
ஒரு அதிகாலை நேரத்தில்
நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்
இவன் மேனியெங்கும் உலா வந்துகொண்டிருந்தன.
43 comments:
நல்லாயிருக்கு ஆதி.
வெற்றிபெற வாழ்த்துகள்..!
//நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்//
இதுதான் லேசா குழப்புது.மெயிலில் விளக்கம் தேவை.
எப்பயும் சண்டை போட்டு முறைச்சுக்கிட்டே இருக்க முடியுமா. சண்டையும் தீரத்தானே வேணும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
/இதுதான் லேசா குழப்புது.மெயிலில் விளக்கம் தேவை//
இங்கனயே சொன்னா நாங்களூம் தெரிஞ்சுப்போமில்ல!
அடுத்த எண்டர் கவிதையா??
கொஞ்சம் புரிஞ்சுது, கொஞ்சம் குழப்புது.
தராசண்ணே, இதுக்கு பதிலா ஆதிய நீங்க சப்புன்னு அறைஞ்சிருக்கலாம்
Good feel.
ரொம்ப மென்மையா இரு உறவுகளுக்கிடையேயான இறுக்கங்களை அழகா சொல்லியிருக்கீங்க..!!! ( கவிதை புரிஞ்சிடுத்துன்னு குறிப்பால் உணர்த்துகிறேன் )
போட்டிக்காக எழுதப்பட்டிருக்காவிட்டால் இன்னும் நிறைய ரசித்திருப்போம்.காரணம் போட்டிக்கு ஒரு பிரம்மாண்டம் தேவைப்படுகிறதல்லவா ??
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெற்றிபெற வாழ்த்துகள்..!
//பிரியும் படுக்கைகள்
காற்றோடு மட்டுமே உறவு//
ஊடலுக்கு அப்புறம் தானே கூடல்..........
நல்ல பீலிங்கான கவிதை.....................
நர்சிம் மாதிரி விளக்கம் முதலில் கொடுத்துட்டு அப்புறம் கவிதை ப்ளீஸ்....நான் கொஞ்சம் மக்கு...
வெற்றிபெற வாழ்த்துகள் ஆதி..!
அவ்வ்வ்வ்....
வெற்றிபெற வாழ்த்துகள் ஜி..
அருமை. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!
அது சரி..
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
--வித்யா
இன்று நிறைய டெம்பிளேட் பின்னூட்டங்கள் போல..!!! என்சாய் !!!
இதைச் சொன்னமைக்காகஇவன் வருந்தி உழல வேண்டும்காயம் கொள்ள வேண்டும்வார்த்தைகள் இல்லாமல் கழியும் பகல்கள்அத்தியாவசியமாய் எழும் தட்டையான ஒலிக்குறிப்புகள் //
அஃதே அஃதே, அவ்ளோ லேசுல விட்றமுடியுமா என்ன ;)
ஊடல் / கூடல் சொல்லப்பட்ட விதம் ரொம்ப பிடிச்சிருந்தது.
அ.மு.செ, சொன்ன மாதிரி போட்டிக்கவிதையென்றால் கொஞ்சம் பிரமாண்டம் தேவைப்படுமோ, இந்தக் கவிதை எளிமையாக இருப்பது மாதிரி ஒரு உணர்வு (ஏன்னா, எனக்கே புரிஞ்சிடுச்சே :)
அடப்பாவிகளா.. அப்போ இந்த வடையும் போச்சா.?? அவ்வ்வ்வ்..
இலக்கியன், அம்மிணி, தண்டோரா, தராசு, கார்க்கி, விக்னேஷ்வரி, செய்யது, நாஞ்சில், சங்கவி, அமுதா, ரம்யா, ப்ரதாபன், வனிலா, ராமலக்ஷ்மி, வித்யா, அமித்து..
அனைவருக்கும் நன்றி.!!
@செய்யது, அமித்து : அவ்வ்வ்வ்..
வந்தாச்சு, படிச்சாச்சு, கிளம்பியாச்சு
:)
Super!
தலை நல்லா இருக்கு.எனக்குப் பிடிச்சிருந்தது...
இலக்கியன் இன்னும் வளரலைன்னு நினைக்கிறேன். இதுக்கு தனியா மெயில்ல வேற விளக்கம் வேணுமாம்...
இந்த முறை சுடச்சுட வடை கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதி...
அப்ப அப்பப்பா ஆதிஅண்ணே ஆகா ஆகா
வார்த்தை வர மாட்டேங்குது ஆகா அருமை அருமை
இதொரு அற்புதமான கணம்
எவ்ளோ அருமையான கவிதை ஏன் எல்லார்டையும் போய் சேரலை
ரொம்பவே வருத்தம் பாஸு ரொம்ப ரொம்ப எளிமையா எவ்ளோ மென்மையா ..........
சொல்லமுடியல பரிசு கிடைக்கனும்யா கிடைக்கணும்
வாழ்த்துக்கள் ஆதி
வெற்றிபெற வாழ்த்துகள்..!
//தட்டையான ஒலிக்குறிப்புகள்//
அப்டின்னா இன்னா சாரே...
மீதிவரிகள் மிக அருமையா கோர்த்துருக்கிங்க...
வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
"மேலும் சில முறிதல்கள் நிகழ்கின்றன
இதைச் சொன்னமைக்காக
நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்இவன் மேனியெங்கும் உலா வந்துகொண்டிருந்தன"
நோக்கம் இருக்கு தல உஷாரு!
அடி லேச பட்டுதா?
ஊமைகாயமா இருக்குமா?
பால் வாங்க போனா வீக்கம் வெளியில தெரியுமா?
:-))))))))))
வெற்றிபெற வாழ்த்துகள் ஆதி!
கவிதையின் நேர்பொருளை விட மறைபொருளாய் நீங்கள் சொல்லியிருந்த விஷயங்கள் ரசிக்க வைத்தது ஆதி!
வெற்றி பெற வாழ்த்துகள்!
ஹிஹி அங்கேயும் இதே கதை தானா?
நல்லா இருக்குங்க
வெற்றி பெற நல்வாழ்த்துகள் ஆதி
கவிதையின் தலைப்புதான்..!
:)
"நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்
இவன் மேனியெங்கும் உலா வந்துகொண்டிருந்தன."
Romba nalla irukku. All the best for winning :)
நல்லா இருக்கு ஆதி!!
ஆனால் பரிசல் ஏன் 'மறை பொருள்' இருக்கிறது என்று சொல்லி குட்டையை குழப்புகிறார் :-) "நோக்கம் எதுவுமே இல்லாத விரல்கள்" அவர்களுடைய குழந்தையோடதோ?
--ப்ரியமுடன் பாலா
//Bala Aramvalarthaan said...
நல்லா இருக்கு ஆதி!!
ஆனால் பரிசல் ஏன் 'மறை பொருள்' இருக்கிறது என்று சொல்லி குட்டையை குழப்புகிறார்//
நல்லா இருக்கு ஆதி!!
ஒருவேளை கவிஞர்களுக்கு மாத்திரம் புரியுமோ என்னவோ?
கவிதைய செலக்ட் பண்ணப் போறவங்களுக்கு புரிஞ்சா சரி
பகல்களில் முறிந்ததையும் கிழிந்ததையும் இணைப்பது இரவில் மட்டுமே சாத்தியம். மிகவும் அழகான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
யான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அப்துல், தீபா, தமிழ்பறவை, பாலா (நக்கல் பண்ற மாதிரியே இருக்குதே..), கணேஷ், அருணா, வசந்த் ((தட்டை சாப்பிட்டதில்லையா?), சிவா, பரிசல் (அப்பிடி என்னாத்த கண்டுக்கிட்டீங்க..), கேவிஆர், நிலாரசிகன், சீனா, கறுப்பி, தோழி, பாலா (இதுவும் நல்லாயிருக்கே), கரிசல், அரவிந்தன், தியா..
அனைவருக்கும் நன்றி.!
நல்ல கவிதை..
ஆனாலும் போட்டிக்கென அறிவித்திருப்பது லேசான ஏமாற்றமே...
போட்டிகளுக்கென ஒரு ஆழ்ந்த அழுத்தமான உட்பொருள் இருக்க வேண்டுமல்லவா..?
இந்த கவிதையிலும் வழக்கமான உங்கள் வாசகர்கள் கொஞ்சம் கூடுதலாக புரிதலுடன் உரிமையான கமெண்ட் போட்டுள்ளதைக்காட்டிலுமே,
ஒரு அற்புதமான மெல்லிய நிகழ்வை நுட்பமாக பதிவு செய்துள்ளதாகவே தோன்றுகிறது..
திருமணமாகாத வாசகர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் என்ற எண்ணமும் எழாமலில்லை..
நிஜமாகவே அருமை ஆதி!
மிக அருமை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
உறவும், முறிவும் பற்றிய கவிதைக்கு மிக்க நன்றி. வெற்றி பெற வாழ்த்துகள்.
வெற்றிபெற வாழ்த்துகள்.
//Bala Aramvalarthaan said...
நல்லா இருக்கு ஆதி!!
ஆனால் பரிசல் ஏன் 'மறை பொருள்' இருக்கிறது என்று சொல்லி குட்டையை குழப்புகிறார்//
நல்லா இருக்கு ஆதி!!
ஒருவேளை கவிஞர்களுக்கு மாத்திரம் புரியுமோ என்னவோ?
கவிதைய செலக்ட் பண்ணப் போறவங்களுக்கு புரிஞ்சா சரி//
naan kavigan illanga, enaku konjam puriyum padi solluringala...?
Post a Comment