சுஜாதாவும், பொன்னியின்செல்வனும்.!
அஞ்சாதே : சில சுவாரசியங்கள்
எனக்கு கமர்ஷியல் பிடிக்கும்தான். ஆனால் கமர்ஷியல் என்ற போர்வையில் இப்போது சில தமிழ்சினிமா இயக்குனர்கள் பண்ணிக்கொண்டிருக்கும் அராத்து வேலைகள் சுத்தமாக பிடிப்பதில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும்தான். ஆனால் மிக ஆழமாக இருக்கும், அல்லது போலிகளை இனம்காணமுடியாத முன், பின் நவீனத்துவ இலக்கியங்களை பிடிப்பதில்லை. ஏனெனில் அது புரிவதில்லை. எழுத்தோ, சினிமாவோ என் புரிதலுக்கு உட்பட்ட, அழகியலுடன் கூடியவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன். அவையே என்னளவில் இலக்கியம் ஆகின்றன.
அந்த இயக்குனரின் ஆர்வம், பேச்சு, புரிதல் அத்தனையும் எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக ஆளுமை மற்றும் கான்பிடெண்ட் வியப்புக்குரியதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் இருந்தது. ஒரே நாளில் ஒருவரை முழுவதுமாக அளவிட்டுவிடமுடியாதுதான். இருப்பினும் மிகுந்த நம்பிக்கை தருபவராக இருக்கிறார். மகிழ்வான அந்த நிகழ்வும், பேச்சும் மறுநாள் அதிகாலை வரை நீண்டது. நண்பர் அவரது முந்தைய படத்தின் காட்சிகளை ரசித்த விதத்தை விவரித்த போது மகிழ்வுடனும், ஆர்வத்துடனும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
பாதிக்குப்பின்னர் அவர், அவரது குழுவினருடன் இணைந்து ஒரு பெரிய இசைவிருந்தே தந்தார் அல்லது அவர்களுக்குள் அடிக்கடி நிகழும் இயல்பான நிகழ்வின் பார்வையாளர்களாக அன்று நாங்கள் இருந்தோம். புகழ்பெற்ற தமிழ் திரையிசைக்கோவைகளை, அவர்களது முந்தைய படங்களின்/ வருங்கால படங்களுக்கான இசைக்குறிப்புகளை கீ போர்டில் வாசித்து, உருவாக்கி உடன் பாடி மகிழ்ந்திருந்தனர். இசை குறித்த எனது அறிவு கேள்விக்குரிய ஒன்றென்பதால் வெறுமனே வியப்புடன் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஒரு புதிய மெட்டு ஒன்றை அவர்கள் கண்டுகொள்ள அந்த இயக்குனர் அதனுடனே அப்போதே ஒரு நல்ல கவிதை நயத்துடன் கூடிய பாடலையும் பாடிக்கொண்டே சென்றது பிரமிப்பின் உச்சம். உதவியாளர்கள் அவற்றை விடியோவாகவும், குறிப்புகளாகவும் பதிவு செய்துகொண்டேயிருந்தனர். ஆர்வமே (Passion) தொழிலாகவும் நேர்கையில் வரும் குதூகலத்தை நேரிலேயே சற்று பொறாமையுடன் கண்டுகளித்தோம்.
இறுதியாக விருந்தின் உச்சகட்டமாக, கடும் எதிர்பார்ப்பில் இருக்கும் இன்னும் ரிலீஸ் தாமதமாகிக்கொண்டிருக்கும் அவரது அடுத்த படத்தின் துவக்கக்காட்சிகளை சில நிமிடங்கள் கண்டோம். பெரும்பான்மையினரிடம் சிக்கிக்கொண்டு துன்புறும் தமிழ்சினிமாவை நல்ரசனையை நோக்கி திசைதிருப்பும் ஒரு சில இயக்குனர்களின் வரிசையில் இவரும் இணைந்திருக்கிறார். தமிழ்சினிமாவின் தவிர்க்க இயலாத ஓர் இடம் கிடைக்க அவருக்கும், அவரது குழுவினருக்கும் நமது நல்வாழ்த்துகள்.
அந்த இயக்குனர் 'மிஷ்கின்'.
நாங்கள் சிலாகித்த அந்தப்படம் 'அஞ்சாதே'.
சில நிமிடங்களே நாங்கள் கண்ட அந்தப் புதிய படம் 'நந்தலாலா'.
ஒரு முக்கிய பின்னிணைப்பு : மிஷ்கின் பின்னிரவில் அஞ்சப்பரில் இருந்து தந்தூரி சிக்கன் வரவழைத்து உபசரித்தார். அவ்வளவு டேஸ்டியாக இருந்தது. அதெப்படி நாம் எப்போது ஆர்டர் செய்தாலும் சிக்கன் கருகிப்போனதாகவோ அல்லது வாயில் வைக்கமுடியாமலோ போய்விடுகிறது? என்னாங்கடா விளையாடுறீங்களா.?
.
புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - இறுதிப்பகுதி
காண்க.. பகுதி 1
காண்க.. பகுதி 2
காண்க.. பகுதி 3
*****************************
அமிர்தவர்ஷினி அம்மா (சாரதா)

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
அதென்னவோ வீட்டருகிலும் சரி, பள்ளியிலும் சரி, எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்க நான் மட்டும் சதா சர்வகாலமும் எந்த புத்தகத்தையாவது கையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா கூட இவ படிக்க ஆரம்பிச்சிடுவா என்று அக்காவின் தோழி இன்னமும் சொல்வார்கள். நான் முதன் முதல் தொட்ட புத்தகம் லிப்கோவின் தமிழ் ஆங்கில டிக்ஷ்னரி, ஆரம்ப காலகட்டத்தில் மாமா பிரஸ்ஸில் வேலை செய்ததால் புத்தகம் என்று அது ஒன்று மட்டுமே வீட்டில் இருந்தது. அதற்குப்பிறகு வாடகை நூல் நிலையத்தின் மூலமாக பூந்தளிர், ரத்னபாலா, காமிக்ஸ் இப்படி ஆரம்பித்து ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவல்கள் என்று பயணப்பட்டு பள்ளி நூலகத்தின் பாலகுமாரன், சுஜாதாவில் வந்து நின்றது. பிறர் புத்தகங்களைப் படித்திருந்தாலும் ஆதர்சம் பாலகுமாரனும், சுஜாதாவும் தான். பள்ளி நூலகமும், வீட்டருகே இருந்த / இருக்கும் ஈஸ்வரி வாடகை நூலகம் (அலுவலக்ம் அருகே இருந்ததால் கன்னிமரா நூலகம்)தான் நான் அதிகம் சென்ற இடங்கள்.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
வலைப்பூவுக்கு வந்த பின்னர்தான் நிறைய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களும் அறிமுகமாயிற்று. எனவே திட்டமிடல் இந்த வருடத்தில் தான் ஆரம்பம். சின்னதா ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். பார்ப்போம் :)
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
பாலகுமாரனை சந்திக்க விரும்பியது உண்டு, காரணம் அவர் புத்தகத்தின் முன்னுரையில் அவரின் வீட்டு முகவரியில் லாயிட்ஸ் ரோடு என்று அச்சடிக்கப்பட்டு இருக்கும். அது எங்கள் வீட்டிலிருந்து ரொம்பவே பக்கம், பக்கம் என்ன பக்கம், ஸ்கூலுக்கு போகும் வரும் வழியே அதுதான்னு வெச்சிக்கோங்களேன்.
ஒருமுறை மாமாவிடம் அவரைப்பார்க்கவேண்டும் என்று சொன்னதிற்கு செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்ட அனுபவமிருப்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. ஆனால் நான் பள்ளி விட்டு வரும் வரை, சில சமயம் காலை நேரங்களில் அவரை என் வீட்டருகே பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடம் விட்டு வந்த
ஒரு மதிய நேரத்தில் அவரை எதிரே பார்க்க நேரிட, சட்டென்று ஒரு குருட்டு தைரியத்தில், சார், நீங்க பாலகுமாரன் தானே, உங்க புக்ஸ்லாம் நான் நெறைய படிப்பேன் சார் என்று சொல்லி, ஒரு நீல நிற டைரியில் அவரின் சாய்வான கையெழுத்தை வாங்கினேன், அவரும் சிரித்துக்கொண்டே கையெழுத்துப்போட்டுவிட்டு
நல்லா படிம்மா, ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு போனார். அன்று சந்தோஷத்தில் சாப்பாடு கூட உள்ளிறங்கவில்லை.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
எனக்கு ஆரம்பகாலத்தில் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி உடன் புத்தகங்களை பகிர்ந்த நண்பன் ஆனந்த் (இப்போது எங்கிருக்கிறாய் ?) என் வாசிப்பனுவத்தை நீட்டிக்கச்செய்து, நிறைய கவிதைகள் எழுதி, ஒரு கவிதை மாதிரி தன் வாழ்நாளை குறுக்கி வாழ்ந்துவிட்டுப்போன தோழி சுதா, சென்ற வருடம் புத்தக கண்காட்சி (ஜனவரி முதல்வாரம்)தான் நாங்கள் கடைசியாக சந்தித்தது.
அதன் பிறகு இருபது நாட்கள்தான் அவள் இந்த உலகத்தில் வாழ்ந்தாள். இப்போது புத்தககண்காட்சி என்று சொல்லும்போதே அவளின் ஞாபகமும் சற்று அதிகமாகவே வந்துவிடுகிறது.
***********************************
வித்யா
1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
பள்ளி நாட்களில் அப்பா வாங்கி வரும் டிங்கிள், கோகுலம் போன்ற புத்தகங்கள் தான் அதிகம் வாசித்தது. விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போது அண்ணா அறிமுகப்படுத்திய காமிக்ஸ்களில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. ஆல்டைம் பேவரிட்டாக இருந்தது/இருப்பது இரும்புக்கை மாயாவி தான். பின்னர் அடுத்த கட்டமாக ராஜேஷ்குமாரை அண்ணாவும், கல்கி, ஷெல்டன் மற்றும் சுஜாதைவை அப்பாவும் அறிமுகப்படுத்தி வைத்தனர். நண்பர்கள் மூலமாக வைரமுத்து. நினைவில் தங்கி விட்ட புத்தகங்கள் எனப் பார்த்தால் சுஜாதாவின் மர்மக் கதைகள் (கொலையுதிர் காலம்), வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், கல்கியின் அலை ஓசை, சிவகாமியின் சபதம், ஷெல்டனின் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ், பிளட்லைன் இன்னும் பல.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
பெரும்பாலும் இல்லை. திட்டமிட்டு வாங்குவது என்பது நண்பர்களின் பரிந்துரை அல்லது ரிவ்யூக்களின் அடிப்படையில் கண்காட்சியில் மட்டுமே நடக்கும். மற்ற தருணங்களில் கண்ணில் பட்டதை கவர்ந்திழுக்கும் தலைப்பால் கொஞ்சம் மேய்ந்துவிட்டு வாங்குவேன். இந்த புத்தகக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான ரஹோத்தமனின் ராஜிவ் கொலை வழக்கு பற்றிய புத்தகமும், சுஜாதாவின் நாவல்களின் தொகுப்பு சிலவும் வாங்கலாம் என்றிருக்கிறேன். மற்றவை அங்கேயே முடிவாகும்.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
சுஜாதா. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என அவரை அடையாளம் காணும் முன்னரே அவரை சந்தித்து, அவர் கையொப்பமிட்ட கற்றதும் பெற்றதும் புத்தகத்தை பரிசாக வாங்கிவிட்டேன். பள்ளியில் நடந்த அறிவியில் கண்காட்சியை காண வந்திருந்தவர் எங்கள் டிஸ்ப்ளே நன்றாக இருந்ததாக சொல்லி மேடைக்கு அழைத்து புத்தகம் தந்தார் (நால்வருக்கு ஒரு புக். சுழற்சி அடிப்படையில் வைத்துக்கொண்டிருந்தோம். கடைசியாய் வைத்திருந்தவனின் தொடர்பு அற்றுப்போய்விட்டது. புத்தகம் இப்போது இல்லாதது பெரும் வருத்தம்).
4.புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)கல்லூரி, வேலை என்றானபின் வாசிப்பு பழக்கம் பெருமளவிற்கு குறைந்தது. தமிழில் இன்னும் சுஜாதாவை தாண்டி வெளியே வரவில்லை. பா.ரா, ஆதவன் போன்றோரை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நண்பன் ஒருவன் "எத்தனை நாளைக்குத் தான் சுஜாதாவே படிப்ப. கொஞ்சம் நவீன இலக்கிய கதைகளையும் படி" எனக் கூறி ஊமைச்செந்நாயை கையில் கொடுத்தான். ஹூக்கும். இரண்டே கதை. ஒன்னுமே புரியாமல் டரியலாகி "தெய்வமே நான் பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறேன். எலக்கியவியாதி ஆவ வேணாம். பொஸ்தகத்த புடி ராசா" என கையில் திணித்தாயிற்று. நான் ஜெ.மோ வை குறை கூறவில்லை. என் சிற்றறிவுக்கு முடியவில்லை. 2010ல் என் அலமாரியில் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் முடிக்க வேண்டும். நடக்கிறதா என பார்ப்போம்.
****************************************
வடகரை வேலன்
1. வாஷிங்டனில் திருமணம் -சாவி
2. கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன்
3. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
4. ஆழி சூழ் உலகு - ஜோ.டி. க்ரூஸ்
5. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
6. அளம் - சு தமிழ்ச்செல்வி
7. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் -எம்.ஜி.சுரேஷ்
8. மணல் கடிகை - எம்.கோபால கிருஷ்ணன்
9. என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன்.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
அப்படி வாசிக்கும் பழக்கம் இல்லை. எப்படியும் நல்ல எழுத்தாளர்களைப் பற்றிய செய்தி காதுக்கு வந்து விடும் என்பதால் அதிகம் பிரபலமாகாதவர்களைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம். நல்ல எழுத்து அங்கேதான் கிடைக்கும்.
உ-ம். கவிப் பேரரசு எழுதிய கருவாச்சி காவியத்துடன் என்னால் ஒட்டவே முடியவில்லை.
அதே சமயம் அஞ்சலை நாவல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தமிழில் நான் படித்த நாவல்களில் முதலிடத்தில் இன்றளவும் இருப்பது அதுதான்.
நான் சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் இருவர். வண்ணதாசனும், நாஞ்சில் நாடனும். இருவருமே பாசாங்கற்றவர்கள். ஒன்று விட்ட அண்ணனிடம்(உங்கள் பெரியப்பா மகன்) இருக்கும் ஒரு நேசம் இவர்களுடன் எனக்குக் கிடைத்தது. பாசாங்கற்றவர்கள்.போலவே தங்கள் எழுத்தை எந்தவித சந்தைப் படுத்துதல் மற்றும் விற்பனைத் திறன் இல்லாமல் வாழ்கின்றவர்கள்.
நான் சந்திக்க விரும்புவது கண்மனி குணசேகரனை.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
**************************************
நர்சிம்
அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் மனதோடு தங்கிவிட்ட புத்தகங்கள் என்றே தோன்றுகிறது. காரணம் அந்தக் காலகட்டம் மட்டுமே மனதில் தங்கிவிட்டதாலும் இருக்கலாம், அதன் பின்னர் வந்த காலங்கள் எல்லாம் பொருளாதார, தார அக்கப்போர்களுக்கு இடையில் சிக்கிவிட்டதாலும் இருக்கலாம்.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
புத்தகத்தை திறந்து ஓரிரண்டு பக்கங்கள் படித்துப் பார்த்து வாங்குவதும் வாங்கியவுடன் அதை முகர்ந்துபார்ப்பதும் வழக்கம்.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
சுஜாதா.. நிறைவேறியது. ஆனால் நான் பார்த்தது அவருக்குத் தெரியாது. படுத்திருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள்.
ம். இது குறித்து நிறைய சுவாசிப்பு என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். என்றாலும்
பதிவு எழுதுவதற்கு முன்னும் பின்னும் என இரு வகைகளாக வாசிப்பைப் பிரிக்க வேண்டி இருக்கிறது. பதிவு எழுத வருவதற்கு முன்னர் வாசித்த பல புத்தகங்கள் இப்பொழுது மீள்வாசிப்பில் வேறு கோணங்களில் இருக்கிறது. மோக முள்ளை அப்பொழுது வாசிப்பதற்கும் இப்பொழுது வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உணர்கிறேன்.போலவே மரப்பசு.
ரமேஷ் ப்ரேமின் கடுங்காவல் பெருக்கம் என்ற இரண்டு ப்ரெஞ்ச் நாடகங்கள் குறித்த புத்தகம் மனதை பாதித்த ஒன்று
அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் சில கதைகளும் நாவல்களும், எப்பொழுது சோர்வாக உணர்ந்தாலும் கண்ணதாசனின் வனவாசம், சா.கந்தசாமியின் சாயாவனம், மயிலை சீனிவேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை போன்றவை மீள் வாசிப்புகளுக்கு சிறந்தவையாக இருக்கின்றன. சாருவின் ராஸலீலாவும் பிடித்த ஒன்று.
சுஜாதாவின் மேகத்தைத் துரத்தியவனில் ஒரு இளைஞன் இன்னொருவர் வீட்டில் தங்கிப் படும் வேதனையை சொல்லிய விதம் மறக்க முடியாத ஒன்று. நிலாநிழல் என்ற கதையிலும் கிரிக்கெட்டைப் பிரதானமாக வைத்து ஆனால் கிரிக்கெட் தவிர விடலைப் பருவத்தின் மாற்றங்கள் என கதை சொல்லும் விதம் போன்றவை மனதில் பதிந்தவை.
இப்பொழுது தீட்டுப்பட்ட நிலா என்ற சுகுணாதிவாகரின் கவிதைத் தொகுப்பும் மனதை பாதித்தது. அதில் உள்ள ஒரு கவிதை..
இறக்கைகள் அறுந்து வீழ்ந்த
நிலவின் சுவர்களில்
காலை எழுகையில்
செடிகளில்
யோனியில் முளைத்திருந்தது
நன்றி ஆதி.
(பதிவர்களுக்கு : முதலில் வெகு சாதாரணமாக இரண்டு வரிகளில் பதில் அனுப்பி இருந்தேன்.. வெண்பூவின் பேட்டியைப் பார்த்து டரியல் ஆகி இந்த பதில்களைத் தந்திருக்கிறேன்.. ஏதேனும் எக்ஸ்ட்ராவாக உணர்ந்தால் அதற்கு வெண்பூதான் பொறுப்பு.)
.
புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 3
காண்க.. பகுதி 2
முன்குறிப்பு : சென்னை புத்தகக்கண்காட்சி துவங்கவிருக்கும் இவ்வேளையில் புத்தகங்கள் குறித்த வலையுலக நண்பர்களின் ஒரு சிறிய பேட்டியின் தொகுப்புத்தொடர் இது. இது மூன்றாவது பகுதி. இறுதியும் நான்காவதுமான பகுதி இன்று மாலை வெளியாகும்.
*******************************************
ராமலக்ஷ்மி

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
என்னுடைய வாசிப்பு என்பது பகிர்ந்திடும் அளவுக்கு அத்தனை விசாலமானது அல்ல என்றாலும் 'ஒவ்வொரு காலக் கட்டங்களின் போதும்' எனகிற வார்த்தைகள் தந்த ஈர்ப்பு என்னையும் பேச வைக்கிறது. தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது பைண்டு செய்து தரப்பட்ட சிறுவருக்கான சித்திரக் கதைகள்தான்[Fairy Tales] முதல் வாசிப்பின்பம். அடுத்து அறிமுகமானது எழுபதுகளில் வெளிவந்த அத்தனை சிறுவர் மலர்களும் குறிப்பாக கல்கி நிறுவனம் வெளியிட்ட கோகுலம். அதன் முதல் இதழை தந்தை கையில் தந்த தினம் இன்னும் நினைவில். அவரது வழிகாட்டல் ஒன்பது வயதுக்குமேல் கிடைக்காது போனதென்றாலும், கூட்டுக் குடும்பத்தில் பெரியதந்தையாரால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களும் வாங்கப் பட்டதால் வாசிப்பு தொடர்ந்தது.
இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் ஒரு புதிய மாய உலகத்துக்குள் வைத்திருந்தது அப்போதைய சிறுவர்களை. இரும்புக்கை மாயாவி, ரிப் கெர்பி, மாண்ட்ரேக்-லொதார், வேதாளம்-டயானா [நாங்கள் வளர்த்த பிரிய நாய்க்கு ‘ரெக்ஸ்’ என வேதாளம் கதையில் வரும் பொன்னிற முடிச் சிறுவனின் பெயரை வைதது மகிழ்ந்தது வரையிலாக இருந்தது அதன் தாக்கம்] ஆகிய கதாபாத்திரங்கள் இன்றளவிலும் மறக்க முடியாதவை. அப்புசாமியும் சீதாப்பாட்டியும் பீமாராவ் ரசகுண்டுவுடன் அசத்தினார்கள் சிலகாலம். துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் பிடித்தமானவர்களாய் இருந்ததற்கு கதைகளில் வரும் செந்தமிழ் பெயர்களும் தமிழ்வாணனின் அழகான எழுத்து நடையும் முக்கிய காரணமாக இருந்தன. அப்புறம் எண்பதுகளில் தொடர்களாய் வந்த ஸ்டெல்லா ப்ரூஸ், சுஜாதா, பாலகுமாரனின் ஆரம்பக்கால நாவல்கள் ஆகியவை. பள்ளி காலத்தில் கமல்-ரஜனிக்கு இருந்தது போல சிவசங்கரி-இந்துமதிக்குத் தீவிர ரசிகைகள் இருந்தார்கள் அனல் பறக்கும் விவாதங்கள் செய்தபடி. ஆனால் விதிவிலக்காக சுஜாதா எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார்.. சமீபகாலத்தில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் எஸ்.ரா, நாஞ்சில் நாடன் ஆகியோர்.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
பெங்களூர் புத்தகத் திருவிழாவில் குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே ஸ்டால் வைக்கிறார்கள். வாங்க நினைக்கும் எல்லா புத்தகங்களும் கிடைப்பதில்லை. நம் பதிவர்களின் புத்தகங்கள் சிலவற்றை வாங்க ஆவல். அடுத்த கண்காட்சிக்குக் காத்திருக்கிறேன்.
கன்னிங்ஹாம் ரோடில் அமைந்துள்ள ரிலையன்ஸ் டைம் அவுட்டின் புதிய வளாகத்தில் தமிழ் புத்தகங்களுக்கென சிறிய அளவில் தனிப்பிரிவு உள்ளது. அடிக்கடி செல்லும் வழக்கம் உள்ளதால் இங்கு வாங்குவதே அதிகமென்றாகி விட்டது. சமீபத்தில் வாங்கியதில் படித்து ரசித்தவை ‘மாலன் சிறுகதைகள்’ ’சுப்ரமணிய ராஜு கதைகள்’.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
இதெல்லாம் சாத்தியமா என்ன என்கிற நினைப்பில் அப்படிப்பட்ட ஆசை ஏற்பட்டதில்லை:)!
இப்போது சாத்தியமெனும் சூழலில் சந்தர்ப்பம் வாய்க்கையில் வாசித்து வியந்த வலைப்பதிவர் சிலரைச் சந்திக்க ஆவல்:)!
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
எண்ணங்கள் எனில், ஒவ்வொரு காலத்தில் மனதோடு ஒன்றிப் போகும் புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை. ஆனால் சில, காலங்கள் கடந்து முதல் வாசிப்பின்போது ஏற்படுத்திய தாக்கத்துக்கு எள்ளளவும் குறையாமல்..
****************************************
1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

ஆண்டவன் வந்தான் என்ற நாவல் படித்திருக்கிறேன். அருமையான பேண்டஸி கதை. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சொந்தமாக வாங்க தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை.
என் தோழியுடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்வாள். அவளுடன் படித்த ஒரு பெண் Pride and Prejudiceல் வரும் Darcy மாதிரி ஒருவனைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக. பல பெண்களுக்கு பிடித்த கதாபாத்திரம் Darcy.
மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்கள்
1. பொன்னியின் செல்வன்.
2. பந்தயப்புறா
3. ரத்தம் ஒரே நிறம்
4. டாவின்சி கோட்
5. Pride and Prejudice
6. பயணிகள் கவனிக்கவும்
7.கண்ணாடி கோபுரங்கள்
8.பதவிக்காக
9. இரும்புக்குதிரைகள்
இவற்றில் பல சொந்தமாக வைத்திருக்கிறேன். மீதி வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
நண்பர்கள் யாராவது பரிந்துரைத்தால் அந்தப்புத்தகங்களை வாங்குவேன். புத்தகவிழாவுக்கு என்னால் போகவியலாத காரணத்தால் என் அண்ணனிடம் சில புத்தகங்கள் சொல்லியிருக்கிறேன்.
1. என் பெயர் ராமசேஷன் - கிழக்குப்பதிப்பகம்னு நினைக்கிறேன். ஆதவன் எழுதியது.
2.நீர்ப்பறவைகளின் தியானம் - சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர்
3. நகுலன் வீட்டில் யாருமில்லை - சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
4. சேத்தன் பகத்தின் 2 states.
இரா. முருகனின் கதைகள் எதுவும் படித்ததில்லை. கிடைத்தால் வாங்கி அனுப்பசொல்லியிருக்கிறேன்.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
அப்படி யாரையும் சந்திக்க ஆசைப்பட்டதில்லை. (அவர்கள் பற்றிய பிம்பம் குலைய வாய்ப்பு இருப்பதால்.) நேரில் பார்த்துப்பேசிய ஒரே எழுத்தாளர் சுதேசமித்திரன். ஆனால் அவர் எழுத்தாளராகும் முன்பே பழக்கமானவராதலால் எழுத்தாளர் என்று பழகியது குறைவு.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 2
முன்குறிப்பு : அன்பு நண்பர்களே.. இந்தத்தொகுப்பு இன்னும் 2 பகுதிகள்(அதாவது மொத்தம் 4) இன்றும் நாளையும் வெளியாகலாம். பின்னூட்டமிடும் நண்பர்கள் அவர்களால் மறக்க இயலாத புத்தகங்களை பகிர்ந்துகொண்டால் அவற்றை இறுதிப்பாகத்தில் தனியாக நோட் செய்துவிடுகிறேன். அது புதிதாக வாசிக்கத்துவங்கியவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். நன்றி.
************************************
ஜ்யோவ்ராம் சுந்தர்

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
அப்படி நிறைய நிறைய புத்தகங்கள். ஒரு சில மட்டும் இங்கே : பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள், வண்ணதாசனின் தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், வண்ணநிலவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு, சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி, நகுலனின் வாக்குமூலம், சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் (1990களில் வந்த முழுத் தொகுதி), Ayn Randன் The Fountain Head, புதுமைப் பித்தனின் காஞ்சனை, குபராவின் நூருன்னிஸா (அ) விடியுமா, விக்ரமாதித்யனின் பல கவிதைத் , தொகுதிகள், நாகார்ஜுனன் எழுதிய 'கலாச்சாரம், அ கலாச்சாரம், எதிர் கலாச்சாரம்' ... ம்ம்ம் இன்னும் நிறைய நிறைய.!
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
பொதுவாக எழுத்தாளர் சார்ந்தே புத்தகங்களைத் தேர்வு செய்பவன் நான். நண்பர்களின் சிபாரிசின் பேரிலும், புத்தக மதிப்புரைகள் காரணமாகவும் சில புத்தகங்களை வாங்க வேண்டுமென்று முன் தீர்மானித்துக் கொள்வேன். ஆனாலும், பல புத்தகங்களை அங்கே பார்க்கும்போதே வாங்குவது வழக்கம். இந்த வருடம் குறிப்பாக வா மு கோமுவின் சாந்தாமணியின் காதல்கள், சாருவின் சில புத்தகங்கள், தமிழினி வெளியீடாக வரும் ஜெமோவின் புனைவுத் தொகுதியொன்று, அ மார்க்ஸ், ஃபிரான்ஸிஸ் கிருபா போன்றோர் எழுதியிருக்கும் குடி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பொன்று, கோபிகிருஷ்ணனின் முழுத் தொகுதி (வெளியாகியிருந்தால்), மற்றும் இன்னும் சில.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
சின்ன வயதில் பாலகுமாரனைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறேன். சென்னை பெரம்பூர் - செம்பியத்தில் இருக்கும் சிம்சன் நிறுவனத்தில் டாஃபேயில் வேலை செய்து கொண்டிருந்தார் பாலகுமாரன். என்னுடைய அப்பா வேலை செய்ததும் அதற்கு முன் இருக்கும் சிம்சன் - ஷார்ட்லோவில். அப்பாவைப் பார்க்கப் போவது போல் செக்யூரிட்டியில் அனுமதி வாங்கிக் கொண்டு சைக்கிளை அங்கிருக்கும் ஒரு பூங்கா புல் வெளியில் நிறுத்திவிட்டுக் காத்திருப்பேன். பாலகுமாரன் ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்தவுடன் ஒரு திருப்தி. அப்போது எனக்கு 12 வயதிருக்கலாம். எந்த எழுத்தாளரையும் சந்திக்க வேண்டுமென்று முனைந்தது கிடையாது. சுந்தர ராமசாமியைப் பார்க்க காகங்கள் கூட்டத்திற்கு நாகர்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் போய்ப் பேசியது கிடையாது. மனதிற்குப் பிடித்த பல எழுத்தாளர்களைப் பார்த்திருந்தாலும், அவர்களுடன் நேர் அறிமுகம் வைத்துக் கொண்டதில்லை.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
புத்தகங்களைப் படித்த அனுபவங்களா அல்லது புத்தகங்களைப் பற்றிய நினைவுகளா என்ற குழப்பமேற்படுகிறது. அனுபவமென்றால் மிகச் சிறிய வயதில் (6 அல்லது 7 வயதில்) மாதவரம் கிளை நூலகத்தில் அமர்ந்து தினசரிகளையும் அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற பத்திரிகைகளைப் படித்தது நினைவிருக்கிறது. 10-11 வயதில் 5 ரூபாய் கட்டி அதே நூலகத்தில் உறுப்பினராகி, தமிழ்வாணன் (சங்கர்லால் மேஜை மேல் காலைத் தூக்கிப் போட்டு அமர்ந்தபடி ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தொலைபேசி மணி டிரிங் டிரிங் என அடித்தது!), பிறகு சுஜாதா பாலகுமாரன் என வாசிப்பைத் தொடர்ந்தது நினைவிருக்கிறது. 19-20 வயதிற்குப் பின்னர் சிறுபத்திரிகை உலகமும், குமார்ஜி என்ற நண்பரின் மூலம் நிறைய புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. என்னுடைய 21-22 வயதில் வெறி கொண்டு நிறைய புத்தகங்களைப் படித்ததும், அது குறித்து குமார்ஜி, பா ராஜாராம், தெய்வா போன்ற நண்பர்களுக்கு முழ நீளத்திற்குக் கடிதங்கள் எழுதியதும்... ஆஹா... அப்போதெல்லாம் விடுமுறை தினமென்றால் விழுந்து கிடந்து படித்துக் கொண்டிருப்பேன். இப்போது தொடர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் படிப்பதற்குக்கூட உடம்பு வணங்க மாட்டேன் என்கிறது :(--
*****************************************
டாக்டர் புரூனோ

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
பெரும்பாலும் பாடபுத்தகங்களே இந்த பட்டியலில் நினைவிற்கு வருகின்றன. அவற்றின் பட்டியலை எழுதினால் உங்களுக்கு ரசிக்காதே !!
அது தவிர என்று பார்த்தால் இரும்பு குதிரைகள். நான் ஊர் ஊராக சுற்ற வேண்டிய ஒரு வேலையில் இருந்த காலகட்டத்தில், பல ஊர், பலவகைப்பட்ட மக்களூடன் சேர்ந்து பணி புரியும் ஒரு வேலையில் இருந்த நேரம், சென்னையிலிருந்து மதுரைக்கு வைகை விரைவு வண்டியில் செல்லும் போது வாசித்தது. பல வரிகள் அப்படியே மனதில் தங்கியதற்கு எனது பணி சூழல் காரணமாக இருக்கலாம். அந்த புத்தகத்திற்கு மாலன் எழுதிய முன்னுரை காவியம் !!
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
ஆம். சில நேரங்களில் வார இதழ்களில் வரும் தொடர்கள் புத்தகமாக வருகிறதா என்று காத்திருந்து வாங்குவேன். சுமார் 14 வருடம் காத்திருந்து வாங்கியது காந்தளூர் வசந்த குமாரன் கதை. இந்த முறை, அகம் புறம் அந்தப்புறம். புத்தக விழாவிற்கு பிறகு வெளிவரும் பெரியாரின் சிந்தனைகள்.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
எந்த எழுத்தாளரையும் சந்திக்க வேண்டும் என்பதை எனது லட்சியம் என்று இருந்தது கிடையாது!! எழுத்துக்களின் மூலம் சந்திப்பது நடந்து கொண்டு தானே இருக்கிறது
ஆதர்ச எழுத்தாளர் என்று ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. கேனாங், ராபின்ஸ் என்று பெரிய பட்டியலே வரும். தமிழில் நான் அதிகம் வாசித்தது என்றால் சுபா, இந்திரா சௌந்திரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா தான். இவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் சேத்தன் பகத் போன்றவர்களை விட அதிகம் விற்கக்கூடும் என்பது எனது கருத்து.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
இங்கும் பாட புத்தகங்களே முதலில் வருகின்றன :):) துறை சார் புத்தகங்களை வைத்து நீங்கள் இந்த கேள்விகளை கேட்க வில்லை என்றே நினைக்கிறேன். அதனால் விரிவாக பதிலளிக்க முடியவில்லை. ஒரு வேளை துறை சார் புத்தகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றால் கூறுங்கள். விரிவான பதில் கூறுகிறேன் :) :)
************************************
கார்க்கி

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
நான் ஒரு வெண்மேகம் (ஓஷோ), 16 வயதில்..
சிற்பியே உன்னை செதுக்குகிறேன் (வைரமுத்து), 17 வயதில்..
நட்புக்காலம் (அறிவுமதி), 20 வயதில்..
மோகமுள் (தி.ஜா), 21 வயதில்..
வெண்ணிற இரவுகள் (தஸ்தாயெவ்ஸ்கி), 22 வயதில்..
நான்..நீ..காதல் (கார்க்கி..ஹிஹிஹி. இன்னும் வெளிவரவில்லை), 23 வயதில்..
The alchemist (paulo cohelo), 25 வயதில்..
அய்யனார் கம்மா (நர்சிம்), 26 வயதில்..
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
உலக இலக்கியங்களை தேடித்தேடி வாங்குவேன். இந்த வருடம் அதிகம் வாங்கும் ஆவலில்லை. ஏனென்றும் தெரியவில்லை.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
முகில். ஆம் லொள்ளு தர்பார் முகில்தான். இன்னும் நிறைவேறவில்லை. என் ஆதர்ச எழுத்தாளாராக சுஜாதாவை நினைத்துக் கொண்டுதான் பதிவெழுதவே வந்தேன். இப்போது அவரும் இல்லை :))
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
கார்க்கியின் (அந்த கார்க்கிப்பா) வாழ்க்கை வரலாறு. ஆறு வயதிலே சாக வேண்டியவர். தப்பித்து 68 வயது வரை வாழ்ந்தார். அவர் வாழ்வில் சந்தோஷம் என்பது போன்ற நிகழ்வுகளே கிடையாது. ஆனால் அவர் வாழ்க்கையை அவர் முழுமையாய் உணர்ந்திருக்க கூடும். லைஃப் கஷ்டம்டா என்றோ, போரடிக்குது மச்சி என்றோ யாராவ்து சொன்னால் இவர் வாழ்க்கை வரலாற்றை படிக்கட்டும். என் ராயல் சல்யூட் இவருக்கும் சேவுக்கும் மட்டும்தான். ஒன்றும் புரியாத வயதில் அவர் பேர் வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக படித்தேன். இன்னும் படித்துக் கொண்டேயிருக்கிறேன். என் தந்தை எனக்களித்த மிகப் பெரிய சொத்து, என் பெயர்.
***********************************
கேபிள் சங்கர் (பி. சங்கர நாராயண்)

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே என் அம்மா தான். ஆபீஸிலிருந்து வரும் போதே சர்குலேஷனில் வரும் குமுதம், விகடன், கல்கி என்று ஆரம்பித்த பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாய் முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா, ரத்னபாலா என்று வளர்ந்து ஒரு கட்டத்தில் சுஜாதாவை படிக்க ஆரம்பித்ததும் அப்படியே ஸ்டென் ஆகி.. பாலகுமாரன், சுபா, ராஜேஷ்குமார், பிகேபி என்று படிக்க ஆரம்பித்து, மெல்ல ஆங்கிலத்துக்கு தாவி, ஜெப்ரி ஆர்ச்சர்ரையும், இர்வின் வாலசையும், அர்தர் ஹெய்லி, எரிக் சீகலையும், ஐயன் ராண்டை, என்று ஓடி, இப்போதைய சேட்டன் பகத் வரைக்கும் படிப்பது முடியவில்லை. தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
அப்படியெல்லாம் முன் கூட்டியே முடிவு செய்து கொள்வதில்லை. ரேண்டமாய் ஒரு பார்வை பார்த்து பிடித்திருந்தால் கையிலிருக்கும் பட்ஜெட்டை பொறுத்து வாங்குவதுதான். ஆனால் இம்முறை வ.மு.கோமுவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு அவரது கள்ளியை ஏற்கனவே படித்து பிடித்து போனதால் அவரது சாந்தாமணியும், இன்ன பிற காதல் கதைகளை வாங்க ஆவலாய் உள்ளேன்.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
நிறைய பேருடைய அனுபவம் போல் எழுத்தாளர்களை பற்றி எந்த விதமான பெரிய எக்ஸ்பக்டேஷனை வைத்து கொள்ள விரும்பமாட்டேன். திரைத்துறையில் உள்ளதால் பெரிய நடிகர்களை, இயக்குனர்களை கூடவே இருந்து பார்ப்பதால் அவர்களின் ப்ளஸ், மைனஸ் எலலாம் தெரியுமாதலால் பிரம்மிப்பு இருக்காது. அப்படி சந்தித்தவர்களில் சுஜாதா, பாலகுமாரன், சாரு, எஸ்.ரா, வா.மு.கோமு இதில் பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்து கொண்டிருந்த காலத்தில் ஓரளவுக்கு நட்பு இருந்தது. பழகிய பின்பு எழுத்தும் , அவரும் வேறு என்று புரிந்தது. என்றைக்கும் எனக்கு, தமிழ் இலக்கியத்தை அறிமுக படுத்திய சுஜாதா ஒருவரே ஆதர்ச எழுத்தாளர்..
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
ஒரு முறை முத்து காமிக்ஸை சயன்ஸ் புத்தகத்தின் நடுவில் வைத்து படித்து மாட்டிக் கொண்டு உதை வாங்கியதும். செலவுக்கு கிடைக்கும் காசையெல்லாம் சேர்த்துவைத்து புத்தகப்பித்தனின் குமரி பதிப்பகம் வெளியீடும் சுஜாதாவின் அத்தனை புத்தகங்களையும் திருட்டு தனமாய் வாங்கி ஒளித்து வைத்து படித்தது. பின்னாளில் ஒளித்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்துவிட்டு என் அப்பா இனிமே ஒளிக்காம படி.. என்றதும். இன்றளவில் என்னால் மறக்க முடியாத அனுபவம். நடுவே பத்தாவது படிக்கும் போது ஸ்கூலில் கூட படிக்கும் பெண்ணிற்கு சுஜாதாவை பிடிக்கும் ஆனால் வீட்டில் படிக்க முடியாது என்றதனால், வீட்டிலிருந்து தினமும் புத்தகத்தை எடுத்து போய் அவளுக்கு கொடுத்ததையும் அதன்பின்பு நடந்த சம்பவங்களையும் மறக்கவே முடியாது.
காண்க பகுதி-3.
காண்க.. பகுதி 4 (இறுதி)
.
புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 1 (300வது பதிவு)
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
ஒரு சில புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடி படிப்பதும் பார்ப்பதும் உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் கடைக்கு (அ) இணைய புத்தக விற்பனை தளங்களுக்கு சின்ன விசிட் அடிக்கச் சென்று அப்படியே வாங்குவதுதான் அதிகம். அதனாலேயே அந்த விசிட்களை தவிர்க்கின்ற அளவுக்கு அடிக்ட். இந்த விழாவில் கண்டிப்பாக வாங்கப்போகும் புத்தகங்கள்:
1. கல்கியின் பொன்னியின் செல்வன்
2. இரா.முருகவேள் மொழிபெயர்த்துள்ள விடியல் பதிப்பகத்தின் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்"
3. ரஹோத்தமன் எழுதிய கிழக்கு வெளியீடான "ராஜிவ்காந்தி படுகொலை வழக்கு"
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
சிறு வயதுகளில் நான் படிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு.
ஆனால் எழுத்தாளர் தன் எழுத்துகளின் மூலம் கட்டமைக்கும் பிம்பத்திற்கும் உண்மைக்கும் தொலைவு பெரும்பாலும் அதிகம் என்பது புரிந்தபின் இப்போதெல்லாம் ஆசைப்படுவதில்லை.
ஆதர்ச எழுத்தாளர் என்று யாரும் இல்லை. சுவாரசியமாக எழுதும் அனைவரையும் பிடிக்கும், வலையுலக எழுத்தாளர்கள் உட்பட.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
சமீபத்தில் படித்த பொன்னியின் செல்வன். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுடன் கற்பனையைக் கலந்து கொஞ்சமும் சுவாரசியம் குன்றாமல் 2500 பக்கங்களுக்கு ஒரு கதையை தமிழில் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.மற்றபடி மறக்கவியலாத நினைவு என்பது விகடன் இதழில் என் முதல் சிறுகதை வந்ததை சொல்லலாம்.
*******************************************
கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ மற்றும் கவிதைகள்
ஆதவனின் என் பெயர் ராமசேஷன்
இன்னொரு புத்தகம்: லிஃப்கோவின் ஆங்கில-தமிழ் அகராதி
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
அப்படி வருவதாயின் உயிர்மையின் புதிய புத்தகங்களை அலசி வாங்க ஆசை. அப்புறம் நம் பதிவுலக நண்பர்களின் புத்தகங்களை, புத்தக ஸ்டால்களில் பார்க்க (வாங்கவும்தான்) ஆசை. அந்தப் பரவசமே தனி. இதை பாலபாரதியின் புத்தகம் வந்தபோது ஈரோடு திருவிழாவிலும், லக்கியின் புத்தகம் வந்தபோது திருப்பூரிலும் உணர்ந்திருக்கிறேன். இப்போது நர்சிம்.
அப்புறம் நகுலன் கவிதைகள் முழுத்தொகுப்பு.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

முதன் முதலில் நான் வாசித்த கதைப்புத்தகம் "சிறுவர்மலர்". எங்கள் வீட்டில் அப்போது செய்தித்தாள் வாங்குவதில்லை. பக்கத்துவீட்டிற்கு வரும் சிறுவர்மலரை படிக்க எனக்கும் என் அண்ணனுக்கும் பெரிய போட்டியே நடக்கும்.வெள்ளிக்கிழமை என்றாலே சிறுவர்மலரும் "ஒலியும் ஒளியும்" தான் அப்போதைய பேரானந்தங்கள்.
பதின்ம வயதில்:
இரும்புக்கை மாயாவியும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்து எங்கள்வீட்டிற்கு வந்த ஒரு ருஷிய காமிக்ஸும். பெயர் நினைவில் இல்லை.
கல்லூரிக்காலங்களில்:
தீவிர இலக்கிய வாசிப்பு அறிமுகமானது கல்லூரியில்தான். ஜெயகாந்தன்,கல்கி,புதுமைப்பித்
பணிபுரியும் தற்காலத்தில்:
வெகு நாட்களாக வாசிக்க நினைத்து முடியாமல் போன வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" நாவலும்,கி.ரா வின் "பிஞ்சுகள்" நாவலும் மனதை கவர்ந்த படைப்புகள். மனதில் தங்கிய படைப்பாக கண்மணி குணசேகரனின் "அஞ்சலை"யும் யுவன் சந்திரசேகரனின் "ஒளி விலகலும்"
உயிர்மை பதிப்பகம்:
1. நகரத்திற்கு வெளியே - சிறுகதைகள் - விஜய் மகேந்திரன்
2.நீலநதி - சிறுகதைகள் - லஷ்மி சரவணக்குமார்
3.புதியகாலம் - கட்டுரைகள் - ஜெயமோகன்
4.வாசக பர்வம் - கட்டுரைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
5.நகுலன் வீட்டில் யாருமில்லை - சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
6.கெட்ட வார்த்தை - கட்டுரைகள் - சாரு நிவேதிதா
7.வேட்கையின் நிறம் - கவிதைகள் - உமா சக்தி
8.மஞ்சணத்தி - கவிதைகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
9.சைபர் சாத்தான்கள் - கட்டுரைகள் - வா.மணிகண்டன்
10.சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - நாவல் - வா.மு.கோமு
11.கானல் வரி - குறுநாவல் - தமிழ்நதி
12.அதீதத்தின் ருசி - கவிதைகள் - மனுஷ்ய புத்திரன்
13.ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு - மொழிபெயர்ப்பு கவிதைகள் - யமுனா ராஜேந்திரன்
14.நீர்ப்பறவைகளின் தியானம் - சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர்
வம்சி பதிப்பகம்:
15.கிளிஞ்சல்கள் பறக்கின்றன - கவிதைகள் - வலைப்பதிவர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்புநூல்
16.மரப்பாச்சியின் சில ஆடைகள் - சிறுகதைகள் - வலைப்பதிவர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புநூல்
17.தனிமையின் இசை - அய்யனார்
காலச்சுவடு பதிப்பகம்:
சில புத்தகங்கள்
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
ஆதர்ச எழுத்தாளர் தமிழில் எஸ்.ரா, வண்ணதாசன் ஆங்கிலத்தில் ஓ.ஹென்றி. (இவை தற்காலிகமானது. வாசிப்பனுபவத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் )